ஏப். 13ல் சபரிமலை நடை திறப்பு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

சபரிமலை : சபரிமலை நடை ஏப்., 13 மாலை திறக்கப்படுகிறது. 'ஐந்து நாட்கள் நடைபெறும் பூஜைகளில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை' என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது.கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நடைபெறவில்லை. சித்திரை விஷு விழாவுக்காக, ஏப்., 10ல் நடை திறப்பதாக இருந்தது. அதுவும் ரத்து செய்யப்பட்டு, சித்திரை மாத பூஜைக்காக மட்டும் நடை திறக்க, தேவசம் போர்டு முடிவு செய்தது.


இதன்படி, ஏப்., 13 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 15ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, வழக்கமான பூஜைகள் நடைபெறும். படி பூஜை போன்ற சிறப்பு பூஜைகள் எதுவும் கிடையாது.தொடர்ந்து, 18ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில், பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. 15ம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், பக்தர்களை அனுமதிப்பதில்லை என, தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.


Popular posts
அதே போல, சிறு நிறுவன கடன்களில், வட்டி கட்டவும், தவணைகளைச் செலுத்தவும், 90 நாட்கள் விடுமுறை கொடுக்க, ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும். தனிநபர் கடன்களை மறுசீரமைத்துக் கொள்ளவும், கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளவும்
கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.500 கோடி கூடுதல் நிதி: இ.பி.எஸ்.,
கொரோனா சிகிச்சைக்கு 60 லட்சம் நர்ஸ்கள் பற்றாக்குறை
மக்கள் மனசாட்சியோடு நடக்க வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்
ஊடாகவே மின்சார கதிரைக்கு செல்வதை தமது அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்